01.
அல்லி இதழ்களை அரிந்து கண்களின் மீது வைத்து கட்டி வர கண்சிவப்பு, எரிச்சல், நீர் வடிதல் இவற்றுக்கு நல்ல குணம் கிடைக்கும்.
02.
சீரகம் சிறிதளவு, சிறிதளவு மிளகு இரண்டையும் பொடித்து எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, தலையில் தேய்த்துக்
குளித்தால், கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் நீங்கும்.
03. நெருஞ்சில் செடி இரண்டு, ஒரு கைப்பிடி
அருகம்புல் ஆகியவற்றை நசுக்கி ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வைத்துக் கொண்டு காலை மாலை 50 மி.லி. வீதம் 3 நாள் குடித்து வந்தால் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் ஆகியவை தீரும்.
04.
நெருஞ்சில் செடி, அறுகம் புல் இரண்டையும் சேர்த்து கசாயம் செய்து குடித்து வந்தால், கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் குணமாகும். (1428)
05. பீத ரோகினி வேரை அரைத்து வடிகட்டி ஓரிரு துளிகள் கண்களில் விட கண்களில் நீர் வடிதல் குணமாகும்.(042)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )17]
{31-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக