01. கற்றாழைச் சோற்றை எடுத்து, இரவில் பாதம் முழுதும் தேய்த்து விட்டு உறங்க, பாத வெடிப்பு, பாத எரிச்சல் ஆகியவை தீரும்.
02. சுரைக் காயின் சதைப் பகுதியை எடுத்து நன்கு பிசைந்து பாதங்களில் கட்டினால் பாத எரிச்சல் குணமாகும். (1016) (1151)
03. பாகல் இலைச் சாறு தடவி வந்தால் உள்ளங்கால் எரிச்சல் தீரும். (1414)
04. மருதாணியை எலுமிச்சைச் சாறுடன் கலந்து அரைத்து, பாதங்களில் தடவி வந்தால் பாத எரிச்சல் நீங்கும். (444)
05. வாழைப் பூவைப் பருப்புடன் சமைத்து உண்டு வந்தால் கால் எரிச்சல், (பாத எரிச்சல்) உள்ளங் கை எரிச்சல் குணமாகும்.
(1029)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக