மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 3 ஜூன், 2021

கால் - சேற்றுப்புண். (Sore Foot)

 

01.   உளுந்து மாவுடன் எலுமிச்சம் பழச் சாறு கலந்து பிசைந்து பூசி வந்தால் சேற்றுப் புண்கள் ஆறும்.(1961)

 

02.   எலுமிச்சம் பழச் சாறு எடுத்து சிறிது உளுத்த மாவுடன் கலந்து பிசைந்து சேற்றுப் புண் மீது தடவி வந்தால் அவை ஆறும்.(1961)

 

03.   கொத்துமல்லி எண்ணெயைப் பூசினால் சேற்றுப் புண் குணமாகும்.

 

04.   புளியங் காயை அடுப்பில் சுட்டு, சேற்றுப் புண்ணுள்ள இடத்தில் மட்டும் தேய்க்க வேண்டும். காலையில் உப்புக் கலந்த சுடு நீரில் கால்களைக் கழுவிட வேண்டும். (ஆதாரம் : “ நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 

05.   மஞ்சளைத் தண்ணீர் விட்டுக் கல்லில் தேய்த்து வழித்தெடுத்து சம அளவு சுண்ணாம்பு சேர்த்து தொடர்ந்து ஏழு நாள்கள் புண்கள் மீது தடவி வந்தால் சேற்றுப் புண் குணமாகும். ஒருநாள் விட்டு ஒருநாள் உப்புக் கலந்த சுடுநீரால் விரல் இடுக்குகளைக் கழுவித் துடைத்து விட்டு இம்மருந்தைப் பூச வேண்டும்.(ஆதாரம்: நாட்டு மருத்துவ மணி நாகம்மா நூல்)

 

06.   மஞ்சள் பொடியுடன் சிறிதளவு கடுக்காய்ப் பொடி சேர்த்து அரைத்துப் பூசினால் சேற்றுப் புண் குணமாகும்.

 

07.   வேப்ப எண்ணெயைக் காய்ச்சி பொறுக்கும் சூட்டில்  சேற்றுப் புண் மீது தடவி வந்தால், புண் விரைவில்  ஆறும். துணியை இவ்வெண்ணெயில் தோய்த்துப் பிழிந்தபின் அதை விரல்களில் இரவில் சுற்றி வந்தாலும் புண்கள் ஆறும்.(420) (1165)

 

08.   வேப்ப எண்ணெயைக் காய்ச்சி சேற்றுப் புண் மீது தடவி வந்தால், சேற்றுப் புண் குணமாகும்.  (420) (1165)

 

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021}

 

==========================================================


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக