மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 5 ஜூன், 2021

சிறுநீர்ப் பாதை - சதையடைப்பு (Urinary duct - Blockage)

 

01.  நத்தை சூரி விதையை வறுத்துப் பொடித்து நீரில் இட்டுக் காய்ச்சி, வடித்து, பால், கற்கண்டு  கலந்து காலை மாலை  பருகி வர உடல் வெப்பு தணியும். கல்லடைப்பு, சதையடைப்பு, வெள்ளை படுதல் ஆகியவை தீரும்.

 

02.  நெருஞ்சில் வித்தினைப் பாலில் அவித்து உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை 1-1/2 தேக்கரண்டி அளவு இளநீரில் கலந்து சாப்பிட்டு வரச் சிறுநீர்க் கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு ஆகியவை தீரும்

 

03.  நெருஞ்சில் விதைகளை எடுத்து உலர்த்தி பொடி செய்து, அரைத் தேக்கரண்டி பொடி எடுத்து தேனில் சாப்பிட்டு வந்தால், சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் சதையடைப்பு நீங்கும்.  சிறுநீரக உபாதைகளை நீக்கும்.  (1201)

 

04.  நெருஞ்சில் விதையைப் பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து தினசரி இரு வேளைகள் இளநீரில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகப் பாதையில் உள்ள சதையடைப்பு நீங்கும்.  (1387)  கல்லடைப்பு நீங்கும்.  (1463)

 

05.  மருதாணியில் முதிர்ந்த  மரமாகப் பார்த்து அதன் வேரினை எடுத்து பட்டையை உரித்து பட்டைக் கசாயம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் சதை அடைப்பு குணமாகும்.  (1536)

 =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )22]

{05-06-2021}

 

===========================================================


 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக