மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 5 ஜூன், 2021

சிறுநீர் - சர்க்கரை அளவு ( Urine Sugar)

 

01.   சிறுகுறிஞ்சா இலை ஒரு பங்கும், தென்னம் பூ இரண்டு பங்கும் எடுத்து மையாய் அரைத்து பட்டாணி அளவில் மாத்திரைகள் செய்து, நிழலில் உலர்த்தி, காலை மாலை ஒவ்வொரு மாத்திரை வெந்நீரில் விழுங்க, சிறுநீர்ச் சர்க்கரை தீரும். மருந்து சாப்பிடும் வரை நோய் விலகி இருக்கும்.

.

02.   சிறுகுறிஞ்சான் இலைகளை நிழலில் காய வைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக் கொண்டு,  அரை தேக்கரண்டி அளவுக்கு  எடுத்து நெய்யில் குழைத்துச் சாப்பிட்டாலும் சிறு நீரில் சர்க்கரையின் அளவு குறையும்

 

03.   நித்திய கல்யாணி வேரை, [ நிழலில் உலர்த்தியது ] நன்கு உலர்ந்த பின் இடித்து,  பொடித்து, வெள்ளைத் துணியிலிட்டுச் சலித்து எடுத்த சூரணம் ஒரு சிட்டிகையை வெந்நீரில் தினமும்  2 அல்லது 3 முறை கொடுத்து வந்தால், சிறு நீரில் சர்க்கரையின் அளவு குறையும்.. சர்க்கரை நோய் கட்டுப்படும்.

 

04.   நித்தியகல்யாணி வேர் சூரணம் ஒரு சிட்டிகை வெந்நீரில் கரைத்து 2 அல்லது 3 முறை குடித்தால் சிறுநீரில் சர்க்கரை அளவு குறையும்.(330) (1323)

 

05.   பாகல் இலைச் சாறு 50 மி.லி. வாரம் ஒரு முறை சாப்பிட்டு வர சிறுநீர்ச் சர்க்கரை அளவு குறையும். (1373)

 

06.   மாந்தளிர்ச் சூரணம் ஒரு தேக்கரண்டி 200 மி.லி நீரில் கொதிக்க வைத்துக் குடித்து வரச் சிறு நீர்ச் சர்க்கரை குறையும்.

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )22]

{05-06-2021}

==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக