01. கொன்றை மரத்தின் வேரை எடுத்து வந்து சுத்தம் செய்து நீர் விட்டுக் கசாயம் செய்து
50 மி.லி அளவுக்குக் குடித்து வந்தால் மேக ரணம் ( நீரிழிவுப் புண் ) தீரும்.(1314) சொறி சிரங்கு நீங்கும் (1886)
02. சிலந்தி நாயகம்
இலைச்சாறு ஒரு .தேக்கரண்டி 25 மி.லி. பாலும் கலந்து இரண்டு வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நீரிழிவு நோய்க் கட்டி குணமாகும்.
03. புங்கம் பூவினை நிழலில் உலர்த்தி, நெய்யில் வறுத்துப் பொடி செய்து ஒரு சிட்டிகை காலை மாலை
தேனில் குழைத்து 2 அல்லது 3 மண்டலம்
சாப்பிட்டு வந்தால் நீரிழிவுப் புண்கள்( மதுமேக ரணங்கள் ) தீரும். புகை,
போகம், மீன்,
கருவாடு நீங்கலாக உணவு கொள்க. (1477)
04.
புன்னை இலையை ஊற வைத்த நீரில் குளித்து
வர மேகரணம், சொறி,
சிரங்கு யாவும் மறையும்.
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்
குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]
{06-07-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக