01. ஆவாரம் பூ, ஆவாரந்
தளிர், ஆவாரம் பட்டை, ஆவாரம் வேர் ஆகியவற்றை சமனளவு எடுத்து நிழலில் உலர்த்தி, இடித்து, மெல்லிய
வெள்ளைத் துணியில் சலித்து, சுத்தமான பசு
நெய் கலந்து சூரணமாக 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உள்மூலம் குணமாகும்
02. காட்டுத் துளசியின் விதைகளைக் காய வைத்து இடித்துத் தூள் செய்து அரை தேக்கரண்டி எடுத்து பாலுடன் கலந்து பருகி வந்தால் உள்மூலம் குணமாகும்.(351)
(361)
03. தான்றிக்காய், தேற்றான் கொட்டை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக வறுத்துப் பொடி செய்து ஐந்து கிராம் வீதம் காலை மட்டும் சாப்பிடுங்கள். உள்மூலம், வெளிமூலம், இரத்தமூலம் ஆகியவை
சீராகும்.
04. திருநீற்றுப்
பச்சிலைச் சாற்றுடன் சம அளவு பால் கலந்து காலை, மாலை என இரு வேளை 100 மி.லி.வீதம் அருந்தி
வந்தால் வெட்டை நோய்கள், மேக சம்பந்தமான நோய்கள், பீனிசம்,
நாட்பட்ட கழிச்சல், உள் மூலம், சிறுநீரக சம்பந்தமான நோய்கள் முதலியவை குணமாகும்.
05. பொடுதலையுடன் உளுத்தம் பருப்பும் சேர்த்து நெய்யில் வதக்கி, துவையல் செய்து
பகல் உணவாகச் சாப்பிட்டு வந்தால் உள்மூலம், பௌத்திரம் ஆகியவை தீரும். (1505)
06. முள்ளி வேர், பிரண்டை வேர், சோற்றுக் கற்றாழை வேர், கடுக்காய், சுக்கு, வெள்ளைப் பூண்டு, மிளகு ஆகியவை வகைக்கு
மூன்று கிராம் எடுத்து, அரைத்துப் புளித்த
மோரில் கலக்கிக் கொடுத்து வந்தால் உள்மூலம் தீரும்.
07. வாழைப் பூ உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம்
உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த உணவாகும். வாழைப்பூ மலத்துடன்
வெளியேறும் இரத்தத்தை தடுக்கும். மூலக் கடுப்பைப்போக்கும்.
=====================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)20]
{05-08-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக